மாயா பிரபஞ்சப் புராணங்களின் வாயிலாக, ஆதி அமிர்தப் பிரபஞ்சத்தைக் கண்டறியத் தக்க தள விவரங்களோடு "அகிலத்திரட்டு அம்மானை" ஆகமத்தின் வேத சாத்திரப் புராணம் விளங்குகிறது.
முதல் அரக்கன் தோன்றிய தருணத்தில் இருந்து, நாம் தற்போது உணரக்கூடிய காலக் கணக்குகள் உருவானதை குறித்து விவரிக்கிறது. இந்த அரக்கர்களின் பிறவியும், அதற்கான அம்சங்கள் முடிவடைவதோடு இக்கால நிலைகள் முடிவடைகின்றன. இக்காலச் சுற்றுகள் என விவரிக்கப்பட்டுள்ள நீடிய யுகம், சதிர் யுகம், நெடிய யுகம், கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் கடந்த ஏழாவது யுகமான கலியுகத்தில் நாம் இருக்கிறோம். இதற்கு மேலாக வரையறுக்கப்படாத தர்மயுக காலம் குறித்தும் அகிலம் விவரிக்கிறது.
மாயா பிரபஞ்ச ஆதி காலமான நீடிய யுகத்தில், குறோணி என்ற அரக்க ஜீவி தோன்றியது. இந்த ஜீவி வாழ்ந்த முறையில் பிரபஞ்சம் மொத்தமும் அதனால் விழுங்கப்பட்டது. அது அமிர்தப் பிரபஞ்சத்தை ஒரு ஜீவி விழுங்கிய விபத்தாகக் காட்சியளித்தது. அந்த ஜீவியிடம் இருந்து பிரபஞ்சத்தை விடுவித்து வாழ்விக்க நாராயணர் மகாவிஷ்ணு சொரூபத்தோடு பூமியில் தவமிருந்தார். அத்தவ வீரியத்தால் "சுறோணித மாயன்" என்று விஸ்வ மயமாக அவதாரம் புரிந்து, குறோணியை ஆறு கூறுகளாகப் பிரித்து சங்காரம் செய்து ஆதிப் பிரபஞ்சத்தை மீண்டும் புனர்பித்தார். இந்தக் குறோணியின் பிண்டங்கள் ஆறினையும் பூமியில் ஆறு குழிகளில் புதையலாக்கியதோடு, நீடிய யுகம் என்ற பெருங்காலச் சுற்று நிகழ்வுகள் நிறைவடைந்தது.
மாயா பிரபஞ்ச ஆதி காலமான நீடிய யுகத்தில், குறோணி என்ற அரக்க ஜீவி தோன்றியது. இந்த ஜீவி வாழ்ந்த முறையில் பிரபஞ்சம் மொத்தமும் அதனால் விழுங்கப்பட்டது...
"சுறோணித மாயன்" அவதாரம்
பூமியில் புதைத்த ஆறு துண்டங்களில் இருந்து பூமியின் முதல் உயிர்கள் தோன்றின. அதில் குண்டோமசாலி என்ற அரக்க ஜீவி தோன்றிய எல்லா உயிர்களையும் தனது பசிக்கு இரையாக்கி வாழ்ந்த நீட்சியுடையதாக இரண்டாவது யுகத்தின் நிகழ்வுகள் இருந்தன...
பிறகு குறோணியின் இரண்டாவது துண்டத்தின் உயிர்கள் தோன்றி வாழ்ந்த காலம் நெடிய யுகமாகியது. இதில் தில்லை மல்லாலன் - மல்லோசி வாகனன் என்ற இரு சூரத்தலைவர்களும்...
குறோணியின் மூன்றாவது துண்டத்தின் பகுதியாக சூரபத்மன் - சிங்கமுகன் என்ற சூரர்களும், இருபால் சூரப்படைகளும் உலகில் தோன்றி வாழ்ந்தன...
குறோணியின் நான்காவது துண்டத்தில் இருந்து தோன்றிய உயிர்கள் வாழ்ந்த காலம் திரேதா யுக காலமாக விளங்கியது...
குறோணியின் ஐந்தாவது துண்டத்தில் தோன்றிய உயிர்கள் வாழ்ந்த காலம் துவாபர யுக காலம் ஆகும்...
முந்தைய யுகங்களில் மும்மூர்த்தியர்களின் முகூர்த்தச் சேவையைத் தழுவி உயிர்கள் பிறவிகொண்ட முறையை மீறி, குறோணியின் ஆறாவது துண்டம் தன்னைத் தானே பிறப்பித்துக் கொண்டது...