Swamithoppe, Tamil Nadu, India

சரஸ்வதி தேவி முகம்

Divider

கலியுகத்தில் திருச்செந்தூர் பதியின் தெற்கு வாரிக்கரையில் பள்ளிகொண்டிருந்த நாராயணர், உமையவளின் அபய அழைப்புக்கு இணங்கி திருக்கயிலைக்குச் சென்று, கயிலை ஈசனோடு விவாதம் புரிந்தார். அப்போது எல்லோரும் கலியை அழித்துக் காக்கும்படி நாராயணரைச் சரணடைந்தனர். அதனால் கலியை அழிக்க ஏழு உலகத்தவரை பூமியில் பிறவி செய்து, சப்த மாதரின் தவத்தை நிறைவேற்றி பூமியில் பிறவி செய்து, மகாலட்சுமியைப் பொன்மகரமாகப் பிறவிச் செய்து, ஈசனைத் திருநடனம் ஆட வைத்து, இத்திருநடன விதிப்படி உலகில் வரும் செய்தியை உலகறியச் செய்வதற்காக, திருமங்கள சபையைக் கூட்டி, அச்சபையில் ஈசன் - பிரம்மா - நாராயணர் தேவ சங்கத்தாரின் மத்தியில், உலகத்தில் சன்னியாசி கோலத்தில் தாங்கள் பூமிக்கு வரும் விவரங்கள் அடங்கியச் செய்தியோடு சரஸ்வதி தேவிக்குக் கூறிட நாராயணரால் எழுதப்பட்டு பூமியில் எல்லோரும் அறியச் செய்வதற்காக அந்தணர் வசம் அனுப்பப்பட்டது. சரஸ்வதி தேவியின் திருவாசக வடிவில் நாராயணரின் கையெழுத்துடன் அகில ஆகமம் இரண்டாவது பிறவி அடைந்தது.