Swamithoppe, Tamil Nadu, India

ஆதி வியாசப் பெருமான் முகம்

Divider

திரு லாடக் கயிலையில் ஈசனோடு உலக நடப்புகளைக் கவனித்திருந்த நாராயணர், உலகில் கலியின் கொடுமை உச்சமாகிய அவலம் கண்டு பொறுக்க இயலாமல், உடனே வைகுண்ட அவதாரம் புரிவதற்கு ஆயத்தமானார். அத்தருணம் ஆதி வியாசர் பெருமானை அழைத்து, பிரபஞ்சத்தின் முன்தோற்றமும், பின்தோற்றமும் கூறிட நாராயணர் கூறினார். இந்த உத்தரவினை ஏற்று வியாசர், அகில ஆகமத்தை மறுபடியும் கூறினார். அதனைக் கயிலை கல்லில் எழுத்தாக்கப்பட்டது. இது அகில ஆகமத்தின் மூன்றாவது பிறவியாக விளங்கியது.