திருச்செந்தூர் தலத்தில் இருந்து தெச்சணத்தில் (தென் குமரி) எழுந்தருளினார். பிரபஞ்சத்தின் எந்தப் பதிவும் இல்லாத சுத்த பரபிரம்மச் சொரூபியான வைகுண்டர், தான் பள்ளிகொண்டு தவசு புரியும் தலத்தைக் கணித்துக்கொண்டார். எனினும் அதை உறுதிப்படுத்த வேத முனியானப் பிரம்மாவை அழைத்து கேட்டார். அப்போது ஆதி பிரம்மா, திருக்கயிலையில் பாலவியாசர் கூறிய ஆதி ஆகமத்தைக் கூறி, அதில் வைகுண்ட அவதாரம் குறித்தும், அவர் தவம் செய்யும் தலம் குறித்தும் கூறிய விவரங்களின் தொகுப்பாக அகில ஆகமம் பிரம்மாவின் வாயிலாக ஐந்தாவது பிறவி அடைந்தது.